Advertisment

சென்னையில் எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா?

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Advertisment

chennai coronavirus strength chennai corporation

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது. குறிப்பாகச் சென்னையில் அதிகம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாக வெளியிட்டது சென்னை மாநகராட்சி. அதன் படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க. நகர்- 28, கோடம்பாக்கம்- 23, அண்ணாநகர்- 22, தண்டையார்பேட்டை- 19, தேனாம்பேட்டை- 15, பெருங்குடி- 7, அடையாறு- 7, வளசரவாக்கம்- 5, திருவொற்றியூர்- 4, மாதவரம்- 3, ஆலந்தூர்- 2, சோழிங்கநல்லூர்- 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் மணலி மற்றும் அம்பத்தூரில் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னையில் மட்டும் சுமார் 205 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

peoples coronavirus case chennai corporation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe