Advertisment

கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கரோனா விழிப்புணர்வுக்காக கரோனா வைரஸ் போன்ற பொம்மைகள் மற்றும் சாலைகளில் ஓவியங்கள் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சென்னை தலைமை செயலகம் செல்லும் வழியில் பிரம்மாண்ட கரோனா பொம்மை வைத்துள்ளனர். இந்த வழியே செல்வோர் இதனை பார்க்காமல் போக முடியாது. ''விலகி இரு, விழித்திரு, வீட்டில் இரு'' என்பதுடன் ''வெளியே வா... காத்திருக்கிறேன்...'' என்ற வாசகமுகம் எழுதி அந்த பொம்மையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.