தீக்குளிக்க முயன்ற முதியவர்; ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு (படங்கள்)

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (18.02.2023) புகார் கொடுக்க வந்த முதியவர் ஒருவர், தன்னுடன் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைக்க முற்பட்டபோது, பாதுகாப்புக்காக ஆட்சியர் அலுவலகத்திலிருந்த காவலர்கள் முதியவரின் செயலைக் கண்டுஅதனைத்தடுத்ததுடன் அவரை அங்கிருந்துதூக்கிச் சென்றனர். இது குறித்து விசாரித்ததில் "ஆதம்பாக்கத்தில் உள்ள 144வது வார்டு கவுன்சிலர் தன்னுடைய 50 வருடப் பழமையான வீட்டை இடித்து விடுவேன் என்று அச்சுறுத்தி வருவதாக" அந்த முதியவர்கூறினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chennai collector office old man
இதையும் படியுங்கள்
Subscribe