சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்,பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமான நிலையம், மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம்உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதியிலும் மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.