Skip to main content

சென்னை தொழிலதிபர் கொலையில் திடுக்... திருநங்கை சாமியாருக்கு வலைவீச்சு

Published on 31/03/2019 | Edited on 31/03/2019

சென்னையை அடுத்து கீழ்கட்டளையைச் சேர்ந்த தொழிலதிபரான பழனிச்சாமி சேலையூர் அருகே ஆடி காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்த கொலை தொடர்பாக இருவர் சரண் அடைந்துள்ள நிலையில் இந்த கொலைக்கு காரணம் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் இந்தக் கொலையை செய்த நபர் தற்போது தலைமறைவாக உள்ள மப்பேடு ஜெய்சக்தி ஆன்மீக பீடத்தின் ரஞ்சித் குமார் குறித்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

murder

 

திருநங்கை சாமியாரான ரஞ்சித் குமார் பில்லி சூனியம் என்ற பெயரில் பலரை அச்சுறுத்தி நில அபகரிப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. ரஞ்சித் குமார் வீட்டில் நள்ளிரவு அமானுஷ்ய பூஜை, பரிகாரம் பூஜைக்கு பலிகொடுக்க ஏராளமான ஆடுகள் வளர்த்து வந்திருக்கிறார் ரஞ்சித்குமார். ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ள பழனிச்சாமி தனது தொழிலில் முன்னேற்றம் அடைய பல்வேறு ஆன்மீக வழிபாடுகளில் இறங்கியிருந்தார். அதை சமீபத்தில் அறிமுகமான ரஞ்சித்குமார் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

 

murder

 

முதலில் அவரை ஆன்மீக அடிமையாக்கிய ரஞ்சித்குமார் மாதத்திற்கு ஒரு முறை சொகுசு கார் வாங்கும் அளவிற்கு பணம் படைத்த பழனிச்சாமியை பயன்படுத்தி அவருடைய ஜெய்சக்தி ஆன்மீக பீடத்தை பெரிய அளவில் விரிவாக்க எண்ணி அவரை பலவகைகளில் ஏமாற்றி பயமுறுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

 

 

murder

 

 

murder

 

ஒரு கட்டத்தில் ரஞ்சித் குமாரின் போலி முகம் தெரிய வர ஆத்திரத்தில் தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார் பழனிச்சாமி. சம்பவத்தன்று பணத்தை வாங்கி வரச் செல்வதாக மனைவியிடம் கூறி சென்ற பழனிச்சாமி கொலை செய்யப்பட்டார்.

 

murder

 

ரஞ்சித்குமாரின் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ளது. இந்த வழக்கில் ரஞ்சித்குமாரை பிடித்து விசாரிக்க தனிப்படை போலீசார் அங்கு சென்று உள்ளனர். அதேபோல் பழனிச்சாமி உடல் சொந்த ஊரான வேடசந்தூர் கொண்டு செல்லப்பட்டது. ரஞ்சித்குமார் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றினார், வேறு யாராவது கொலை செய்யப்பட்டுள்ளனரா என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.