ADVERTISEMENT

சென்னை புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு

07:05 PM Dec 20, 2023 | prabukumar@nak…

47வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது எனத் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 3 ஆம் தேதி மாலை 4.30 மணிக்குத் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் புத்தகக் கண்காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 08.30 மணி வரையில் நடைபெறும்.

ADVERTISEMENT

வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 08.30 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் நாள்தோறும் மாலை நடைபெறும் சிந்தனை அரங்கில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்துறை ஆளுமைகள் உரையாற்ற உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT