சென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது இரு ஐடிஐ மாணவர்கள் நீரில் மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடலில் மூழ்கிய இரு ஐடிஐ மாணவர்களை மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். கடலில் மூழ்கி மீட்கப்பட்ட மற்றொரு மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.