சென்னை அருகே ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான கனரக வாகன தொழிற்சாலையில் (Heavy Vehicles Factory) பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் கிரிஜேஸ்குமாரை மற்றொரு வீரர் சின்ஹா துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பணியை மாற்றுவதற்காக வந்தபோது ஏற்பட்ட மோதலில் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜேஸ்குமார் கொலை செய்யப்பட்டார். துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நீலம்சின்ஹா திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், கிரிஜேஸ் காதில் 6 குண்டுகள் பாய்ந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.