சென்னை அண்ணா சாலையில் சாந்தி திரையரங்கம் அருகில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்தக் கட்டடத்தில் 20க்கும் அதிகமான நிறுவனங்கள் அமைந்துள்ளன. தீ மளமளவென வேகமாகப் பரவியதால் ராட்சத கிரேன் மூலம் தீயை அணைக்கும் பணியில் 50க்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பல நிறுவனங்கள் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில் கணினி விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கூட்டத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் காவல்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment