செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்?

Chengalpattu Olalur Govt Middle School Students incident

செங்கல்பட்டு அருகே உள்ள ஓழலூரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் இன்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த மாணவி மற்றும் மாணவர் என இரண்டு பேர் காரில் கடத்தப்பட்டனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வேலன் என்பவரது மகன் மற்றும் மகளை காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் காரில் கடத்தப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Chengalpattu police
இதையும் படியுங்கள்
Subscribe