Chengalpattu Katangulathur dmk executive incident

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் ஆராவமுதன். இவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்தத்தாக்குதல் சம்பவத்தில் ஆராவமுதனின் கை மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதே சமயம் படுகாயம் அடைந்த ஆராவமுதன் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதுஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத்தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசி தி.மு.க நிர்வாகி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.