Skip to main content

ஜவ்வரிசி தொழிற்சாலையில் சிக்கிய கெமிக்கல்கள்; உணவுப் பாதுகாப்புத்துறை அதிர்ச்சி

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Chemicals trapped in sorghum factory; Food safety shock

உணவுப் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், சேலத்தில் ஜவ்வரிசி ஆலையிலேயே கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் ஜவ்வரிசி தொழிற்சாலை சீல் வைக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.

சேலம் தலைவாசல் அருகே உள்ள சித்தேரி பகுதியில் அமைந்துள்ளது. நியூ பாரத வேல் சேகா ஃபேக்டரி. அந்த ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 'நான் ஃபுட் கிரேட்' ரகத்தைச் சேர்ந்த சோடியம் ஹைபோ குளோரைடு கெமிக்கல் மூன்று கேன்களில் இருந்தது தெரிய வந்தது, உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு ஜவ்வரிசி தயாரித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சேகோ 13,200 கிலோ, ஸ்டார்ச் மில்க் 27 ஆயிரம் கிலோ, ஈர ஸ்டார்ச் மாவு 7500 கிலோ, மக்காச்சோளம் 40 கிலோ, ஹைப்போ கெமிக்கல் 12 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு மொத்தமாக 19 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு தயாரிக்கப்பட்ட மாதிரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு உணவுப் பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த ஆலையின் உரிமையாளருக்கு இது தொடர்பாக நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.