சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று (03/12/2020) மதியம் 12.00 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
'புரெவி' புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய பெய்தகனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக உயர்ந்ததால் முதற்கட்டமாக ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 அடியை கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.15 அடியாக இருக்கிறது.