Skip to main content

மாவட்ட ஆட்சியர்களின் பெயரைக் கொண்டு ஏமாற்றும் கும்பல்! 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

cheating in the name of district collectors!

 

மாவட்ட ஆட்சியர்கள் பெயரை பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் முயற்சி செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் புகைப்படத்தை மொபைல் போன்களில் வைத்து அதன் வழியாக சில தனியார் நிறுவனத்தின் பெயரில் "கிப்ட் வவுச்சர்" வேண்டுமா என்று குறுஞ்செய்தியை கீழ்மட்ட அதிகாரிகளின் செல்போனுக்கு அனுப்பி இந்த மோசடியில் அந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது. 

 

இந்தக் கும்பல், விழுப்புரம் ஆட்சியர் மோகன் பெயரைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்தில் அப்படியான குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியரக அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாவட்டக் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் பெயரைப் பயன்படுத்தி இதேபோன்று செய்திகள் பல தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், கடலூர் குற்றப்பிரிவு தாசில்தார் அன்பழகன் மூலம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதல்கட்ட விசாரணையில் அந்த குறுஞ்செய்தி மேற்குவங்க மாநிலத்தில் இருந்து பரவியுள்ளது என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் பெயரை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவதாகவும் அதனால், அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற மோசடி சம்பவங்கள் ஏற்கனவே ஈரோடு, தேனி ஆகிய மாவட்ட ஆட்சியர்களின் பெயரிலும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.