Skip to main content

காதல் கணவன் வீட்டு வாசலில் காதல் மனைவி தர்ணா ; நடுநாயகமாக பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெண் ஆய்வாளர்

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கதிராமங்கலத்தில் உள்ள காதல் கணவன் வீட்டுவாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை உண்டாக்கியது.

ஆய்வாளரின் அறிவுறைக்கு பிறகு மூன்று மணிநேர தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறார் அந்த இளம்பெண்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் கனிமொழியிடமே விசாரித்தோம் " எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் தூவிபுரம், எனது பெயர் கனிமொழி பி.காம். பட்டதாரி, நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எனது சித்தி வீட்டில் தங்கி அங்குள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன்.

 

INCIDENT IN RAMANATHAPURAM

 

அங்கு வேலை பார்க்கும் சமயத்தில் மதன் என்கிற இளைஞர் ஒருவன் முகநூல் மூலம் நண்பராகி. செல்போனிலும் பேசிக் கொண்டிருந்தோம். இந்த சூழலில் என்னுடைய செல்போன் நம்பரை தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் மாணிக்க நாச்சியார் கோவில் தெருவைச் சேர்ந்த பி.காம். பட்டதாரியான வெங்கடேஷ், அவரது நன்பனான மதனிடம் வாங்கி என்னிடம் பேசிவந்தார். பிறகு காதலாக மாறி, இரண்டரை ஆண்டுகள் காதலித்தோம்.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள அரசுத்தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்தார் வெங்கடேஷ் .கூடவே என்னையும் தூக்குக்குடியில் அவர் பயிற்சி பெறும் தேர்வு மையத்திலேயே ரயில்வே துறை தேர்வுக்கு சேரவைத்தார் வெங்கடேஷ்.

 

INCIDENT IN RAMANATHAPURAM

 

அங்கு சென்றதும் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது, கடந்த 8 மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் எனக்கு தாலியும் கட்டினார், அதன்பிறகு கணவன் மனைவியாகவே இருவரும் வாழ்ந்து வந்தோம், அதன் மூலம் கர்ப்பமும் அடைந்தேன், இது வெளியில் தெரிந்தால் வேறுமாதிரி ஆகிடும், அப்பா,அம்மாவிடம் சொல்லி சமாதானம் வாங்ணும்வரை இந்த குழந்தை நமக்கு வேண்டாம் என கூறி வற்புறுத்தி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிகொடுத்து கர்ப்பத்தை கலைத்தார்.

 

INCIDENT IN RAMANATHAPURAM

 

பெற்றோரிடம் இதுகுறித்து பேசி சம்மதிக்க வைத்து அழைத்து செல்வதாக வந்தவர், கொடுத்த வாக்குறுதியை மீறி வேறு திருமணம் செய்துகொள்ள பெண் பார்ப்பதை கேள்விப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கதிராமங்கலம் வந்து வெங்கடேஷின் பெற்றோரிடம் முறையிட்டேன், கோபமான வெங்டேஷின் உறவினர்கள் அடித்து விரட்டினாங்க, வேறு வழியில்லாம, திரும்ப சென்று  ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி புகார் அளித்தேன். அதற்கான காவல் நிலையத்தில் மனு  ரசீதையும் பெற்றுக்கொண்டு இங்கு வந்து நீதிகேட்கிறேன்," என்கிறார் கனிமொழி.

வெங்கேடஷின் வீட்டிற்கு வந்த கனிமொழி, அவரது வீட்டு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பொதுமக்கள் கூடிவிட்டனர். இந்த தகவல் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் காவல் ஆய்வாளரான சுகுணாவிற்கு தெரியவர அவசர அவசரமாக விரைந்து சென்று விவரங்களைக்கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்,

 

INCIDENT IN RAMANATHAPURAM

 

அப்போது," தனது கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை தர்ணாவில் ஈடுபடுவேன், இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்" என  ஆய்வாளர் சுகுனாவிடம்கூற, கனிமொழியை தனியாக அழைத்துச்சென்று, அறிவுறைகளை வழங்கி, இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிவுறுத்தினார்.

அதோடு வரும் 3 ஆம் தேதி இரு தரப்பினரையும் அழைத்துப்பேசி முடிவெடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்," என்று ஆய்வாளர் சுகுனா கூறி தர்ணா போராட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.