ADVERTISEMENT
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியதோடு பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் கட்டிட தொழிலாளர்களும், தினக்கூலி தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள பல தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கிவருகின்றனர். அந்தவகையில், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் கூலி வேலை செய்வதற்காகத் தமிழகம் வந்து தங்கியிருக்கும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தொண்டு நிறுவனம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
Show comments