Skip to main content

'மாறுது சீதோஷ்ணம்... ஏறுது நீர்மட்டம்..'. தென்மாவட்ட தட்பவெப்ப நிலவரம்!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

'Changing climate ... rising water level ..'. Southern District Climate!

 

கடந்த காலங்களில் கடுக்காய் கொடுத்து வந்த வடகிழக்குப் பருவமழை இந்த வருடம் கடந்த அக்டோபர் நவம் டிசம்பர் வரை தொடர் கனமழையாகப் பெய்தது. குறிப்பாக சென்னையில் திரும்புமிடமெல்லாம் வெள்ளம். கிட்டத்தட்ட சென்னை வாழ் மக்களை வீட்டுக்குள்ளே முடக்கிப் போட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்குமளவுக்குச் செய்திருக்கிறது இந்த வருட பருவமழை. வடமாவட்டங்களில் நிலவரம் இப்படி என்றால் தென்மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை. தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டச் சேதங்களைப் பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலின் வெள்ள நிவாரணப் பணிகளை விரைவு படுத்தினார். நெல்லையில், பெய்த அடை மழைகாரணமாக மணிமுத்தாறு பாபநாசம் சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியது மட்டுமல்ல தென்காசி மாவட்டத்தின் குண்டாறு கடனாநதி, ராமநாதி, அடவிநயினார் போன்ற அனைகள் நிரம்பியதோடு தென் மாவட்ட அணைகளின் உபரிநீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது.

 

'Changing climate ... rising water level ..'. Southern District Climate!

 

குறிப்பாக வானம் பார்த்த பூமியான நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் இந்த வருடம் பரவலான மழை பெய்ததுடன் சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்திருக்கிறது. பணகுடிப் பக்கமுள்ள கிராமப்புறங்களில் காட்டாற்று வெள்ளம் பாலத்தையும் தாண்டி அரிப்பெடுத்துப் பாய்ந்ததால் கிராமப்புற மக்கள்  அவதிக்குள்ளாயினர். ஆபத்தான இந்தக் காட்டற்று வெள்ளத்தை இளைஞர்களின் உதவியோடு கடந்து சென்று கிராம மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறார் பேரவைத் தலைவரான அப்பாவு. மேலும் ராதாபுரம் பக்கமுள்ள ஆத்தங்கரைப் பள்ளிவாசல் திசையன்விளைச் சாலை துண்டிக்குமளவுக்கு வெள்ள நிலைமை போயிருக்கிறது. இதனிடையே தமிழக மழை பொழிவு அளவீட்டைக் கணக்கிட்ட வானிலை ஆய்வு மையம் இந்த வருடம் வடகிழக்குப் பருவ மழை இயல்பை விட அதிக அளவு செய்திருக்கிறது என்ற அளவீடு கணக்கையும் வெளியிட்டது.

 

தென்காசி மாவட்டத்தின் வான் மழையை நம்பியுள்ள சங்கரன்கோவில் பகுதிகளிலும் மழை குறைவைக்கவில்லை. தென் மாவட்டங்களில் விவசாயப் பணிகள் வேகமெடுக்கின்றன.

 

 

இது குறித்து சங்கரன்கோவில் வேல்சாமி, ''போன நாலு வருஷமா மழை யில்ல. இந்த வருஷம் எதிர்பாக்காத நல்ல மழை. பருத்தி சோளம், மக்காச்சோளம் போட்டிருக்கேன். அதிகப்படியா தண்ணி வந்த மழையால பூச்சிகளால தொல்லை பயிர் சேதமாவுது'' என்றார். 

 

 

வடக்குப்புதூரின் செந்தூர்பாண்டியோ ''முன்னாலல்லாம் இந்தப் பகுதியில் 400 அடி போர் போட்டாத்தான் தண்ணி வரும் இப்ப மழையால நிலத்தடி நீர் மட்டம் ஏறிடுச்சி 100 அடி போட்டாலே தண்ணி வந்திருது. குளங்களும் நிரம்பியிருக்கு. வெல கெடைக்காம வெங்காயத்த பதப்படுத்தி ஸ்டாக் வைச்சிருந்தேன். அடை மழையினால, பாதி வெங்காயம் அழுகி நட்ட மாயிறுச்சி'' என்கிறார்.

 

வடக்குப்புதூரின் அய்யாத்துரை, ''சீதோஷ்ணம் இயற்கை மாற்றம் போலதெரியுது. அதனால தான் வானம் பார்த்த பூமியான இங்க யிப்ப நல்லமழை. நெல்பயிர் போட்டேம். மழைத் தண்ணி தேங்குனதால பயிர்க அழுகிறுச்சி. முன்னல்லாம் இப்படி கெடையாது'' என்கிறார்.

 

 

திருவேங்கடம் தாலுகாவின் விவசாய சங்கத் தலைவரான சந்தானம், ''ஏற்கனவே வறட்சியான இது கரிசல் பூமி. கால நிலை மாற்றம் போல இந்த வருஷம் நல்ல மழை. அதனால ஏரியா பொறுத்து இந்தத் தாலுகாவுல சுமார் 22 ஆயிரம் ஏக்கர் இந்த வருஷம் மக்காச்சோளம் பயிர் போட்டிருக்கோம்'' என்கிறார்.

 

'Changing climate ... rising water level ..'. Southern District Climate!

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.