Skip to main content

தென்காசியில் வாக்கு இயந்திரம் வரிசையில் மாற்றம் அ.ம.மு.க. கிளப்பிய பரபரப்பு

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி வாக்குச் சாவடிகளில் வாக்கு இயந்திர வரிசைகள் மாற்றிவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப் பதிவு அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது.

 

admk

 

சங்கரன்கோவில் நகரின் 8-வது மற்றும் 14-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளின் வடகாசியம்மன் கோவில் தெருவில் உள்ள செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குமையத்தை அ.ம.மு.க.வின் வேட்பாளர் பொன்னுத்தாய், மற்றும் அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான முத்தையா உள்ளிட்டவர்கள் பார்வையிட்டார்கள்.
 

அந்தசமயம் வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 முதல் 16 வரையிலான முதலில் வைக்கப்பட வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டாவது வரிசையிலும், 17 முதல் 26 வரையுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் முதலாவது வரிசையிலும் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவர்கள் அதனை மாற்றி முறையான வரிசையில் வைக்க வலியுறுத்தினர். ஆனால், சரியான வரிசையில் தான் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சொன்னதை ஏற்றுக் கொள்ளாத அ.ம.மு.க.வினர், தேர்தல் அதிகாரி உடனடியாக வரவேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். அதை எதிர்த்த அ.தி.மு.க.வினரோ வாக்குப் பதிவை நிறுத்தும் நேரத்தைக் கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் வாக்குப் பதிவு 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக அ.ம.மு.க, அ.தி.மு.க.வினரிடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த தேர்தல் அலுவலர் மற்றும் நகர இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு வந்து பார்வையிட்டதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பது தெரியவர தேர்தல் அலுவலரின் உத்தரவுப்படியும் ஆணயத்தின் விதிமுறைப்படியும் மாற்றி அமைக்கப்பட்டது.

 

admk

 

சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. ராஜேந்திரனி்டம், இதுபோன்று பல பகுதிகளில் விதிமீறல்கள் உள்ளன என முறையிட்டார் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் முத்தையா. வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைப்படி மாற்றியமைக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஓய்ந்தது. இதேபோன்று வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளிலும் மாற்றியமைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் புகாருக்குப் பின்பு சரியாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் அங்கேயும் வாக்குப் பதிவு 30 நிமிடம் தாமதத்திற்குள்ளானது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.