Skip to main content

சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கனரக வாகனங்களுக்கு தடை

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

Change in traffic in Chennai; Ban on heavy vehicles

 

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு சென்னை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற இருப்பதால் ஆற்காடு சாலையில் இன்று முதல் பிப்.11 வரை சோதனை முறையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

 

ஆற்காடு சாலையிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் சைதாப்பேட்டை சாலை வலதுபுறம் நோக்கி செல்லத் தடை எனவும் அந்த வாகனங்கள் துரைசாமி சாலை, சன்னதி சாலை, 2 ஆவது அவென்யூ வழியாகச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துரைசாமி சாலையிலிருந்து சன்னதி தெரு வழியாகச் செல்லும் வாகனங்களில் கனரக வாகனங்கள் காலை மற்றும் மாலை என நெரிசல் மிகுந்த நேரங்களில் செல்லத் தடை செய்யப்படுகிறது. 

 

சைதாப்பேட்டை சாலையிலிருந்து முத்தாலம்மன் சாலை செல்லும் வாகனங்கள் இந்த புதிய உத்தரவினால் தடை செய்யப்படுகிறது என்றும் இந்த வாகனங்கள் 100 அடி இணைப்பு சாலையிலிருந்து முத்தாலம்மன் சாலை சென்று சைதாப்பேட்டை சாலை வழியாகச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.