அண்மையாக ஐபிஎஸ் அதிகாரிகளும், ஐஏஎஸ் அதிகாரிகளும் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் 36 பதிவாளர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை மண்டலம் மற்றும் நெல்லை மண்டலங்களின்36 மாவட்ட பதிவாளர்களைக் கூண்டோடு மாற்றித்தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நிர்வாக காரணங்களுக்காக மாவட்டப் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகத்தமிழக அரசு அறிவித்துள்ளது.