Skip to main content

அ.தி.மு.க. ஊராட்சி தலைவர்களுக்கு இடையூறாக இருப்பதாக 14 ஊராட்சி செயலர்கள் மாற்றம்!

Published on 14/10/2020 | Edited on 15/10/2020

 

 

அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத ஊராட்சி செயலர்களை மாற்ற கோரி அ.தி.மு.க ஊராட்சிமன்ற தலைவர்கள்  கூட்டமைப்பினர் கொடுத்த பட்டியலை அப்படியே அதிகாரிகள் மாற்றி உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு உருவாக்கும்போது அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பிற்கு நாகுடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்கள் இணைந்து நற்பவளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழியானை கூட்டமைப்பு தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். அதாவது ஒரு ஒன்றியத்தில் இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்புத் தலைவர்களாவும் இரு அணியிலும் செயலாளர், பொருளாளர் போன்ற பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்.. "தங்கள் கீழ்கண்ட ஊராட்சிகளில் நமது கழகத்தை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் பதவியேற்று பொறுப்பில் உள்ளனர். அவர்களுக்கு இடையூறாக நமது கழகத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் கீழ்கண்ட ஊராட்சி செயலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

 

அவர்களை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யுமாறு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்றோம்" என்று கூறியுள்ள மனுவோடு 14 ஊராட்சி செயலர்கள் தற்போதைய பணியிடம் அவர்களை மாற்ற வேண்டிய இடம் ஆகிய பட்டியலையும் இணைத்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத்துள்ளனர். அந்த மனு மாவட்ட ஆட்சியரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அறந்தாங்கி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) க்கு அனுப்பியுள்ளனர். இந்த தகவல் அறிந்து ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன், அறந்தாங்கி ஒன்றியப் பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் (திமுக), திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் மணிமொழியான் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊராட்சி செயலர்கள் மாற்றப்படுவதால் நிர்வாக பிரச்சனைகள் வரும் அதனால் பணியிட மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். ஆனால் தி.மு.கவினர் கொடுத்த மனுவுக்கு எந்த பலனும் இல்லை. மாறாக அ.தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கொடுத்த மனுவையும் அவர்கள் கொடுத்த பட்டியலையும் நடவடிக்கைக்கு அனுப்பியுள்ளபடியே ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாறுதல் உத்தரவுகளை 14 ஊராட்சி செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.

 

அ.தி.மு.க.வினர் தங்கள் கழகத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமைச்சரிடம் கொடுத்த மனுவுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதை அறிந்த ஒன்றிய மக்களும் வியந்துள்ளனர். இதுவரை தனி அலுவலர்கள் உள்ள காலக்கட்டத்தில் பசுமை வீடு, கழிவறை கட்டியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது நடவடிக்கை எடுங்கள் என்று மக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தயங்கிய அதிகாரிகள் அ.தி.மு.க. என்றதும் உடனே நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையாக உள்ளது என்கிறார்கள் இளைஞர்கள். இந்த உத்தரவையும் அதற்கான பரிந்துரை கடிதத்தையும் எடுத்துக்கொண்டு நீதிமன்றம் செல்ல ஊராட்சி செயலர்கள் தயாராக உள்ளனராம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.