Skip to main content

தமிழக மாங்காய் விவசாயிகளை காப்பாற்றிய சந்திரபாபுநாயுடு

Published on 09/07/2018 | Edited on 10/07/2018
chandrababu naidu

 

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், பரதராமி பகுதிகளில் மாங்காய் விளைச்சல் அதிகம். ஆண்டுக்கு 2 லட்சம் டன் மாங்காய் உற்பத்தியாகும் பகுதி இது. இந்த மாங்காய்களில் 70 சதவிகிதம் வேலூர் மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு அனுப்பிவைக்கப்படும்.

 


சித்தூரில் மட்டும் மாங்கூழ் தயாரிக்கும் சிறியதும், பெரியதுமாக 500 கம்பெனிகள் உள்ளனவாம். இந்த கம்பெனிகளுக்கான மாங்காய்கள் சித்தூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்தும், வேலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்தும் தொழிற்சாலைகள் வாங்கும். இதன் மூலம் வேலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற்றும், ஓரளவு லாபம் பெற்றும் வந்தனர்.


இந்த ஆண்டும் வேலூர் மாவட்ட விவசாயிகள் மாங்காய்களை ஏற்றுமதி செய்தனர். தமிழக மாங்காய் ஆந்திராவுக்குள் வருவதால் தங்களது மாங்காய் விலை  குறைவதாக சித்தூர் மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர். குற்றம் சாட்டியதோடு இதுதொடர்பாக ஆந்திரா முதல்வரும், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு புகார் அனுப்பினர்.

 


இதுக்குறித்து ஆந்திரா அரசு அதிகாரிகள் விசாரித்தபோது, தமிழக மாங்காய் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக ஆந்திராவிற்கு சென்றதால் ஆந்திரா மாங்காயை கிலோ 5 ரூபாய் அளவுக்கே வாங்கியுள்ளனர் கம்பெனி ஊழியர்கள். தமிழக விவசாயிகளிடமும் அதே அளவுக்கு தான் வாங்கியுள்ளார்கள். தமிழக மாங்காய் ஆந்திராவுக்குள் வரவில்லையென்றால் கூடுதல் விலை நம் விவசாயிகளுக்கு கிடைக்கும் என அறிக்கை தந்துள்ளனர். இதனால் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்தியூம்னா, தமிழக மாங்காய்கள் ஆந்திராவுக்கு வருவதற்கு கடந்த 4ந்தேதி தடைவிதித்தார். இதனால் வேலூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 


இதுப்பற்றி வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் புகார் மனு அளித்தனர். அவரும் சித்தூர் ஆட்சியரிடம் பேசியுள்ளார். இது அரசின் முடிவு என்றுள்ளார். இந்நிலையில் ஜீலை 8ந்தேதி சாலையில் மாம்பழங்களை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது பெரும் பிரச்சனையாவதை உணர்ந்தது ஆந்திரா அரசு.

 

இந்நிலையில் சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் ஜீலை 9ந்தேதி வேலூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக விவசாயிகளை வஞ்சிக்காதீர்கள் என மனு அளிக்கப்பட்டது. அவர் நாளை ஜீலை 10ந்தேதி முதல் மாங்காய்களை ஆந்திராவுக்கு அனுப்ப அனுமதியளித்துள்ளார்.

 


இந்த ஆண்டு தமிழக மாங்காய் ஆந்திராவுக்குள் வந்ததால் ஆந்திரா மாநில விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டன்னுக்கு 2500 ரூபாய் ஆந்திரா மாங்காய் விவசாயிகளுக்கு நஷ்டயீடாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆந்திரா தனது மாநில விவசாயிகளை நட்டத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என அவர்களும் தொடர்ந்து ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் ஆந்திரா விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு 75 ஆயிரம் கிடைக்கிறது. தமிழக விவசாயிகளுக்கு 40 முதல் 50 ஆயிரம் கிடைக்கும் நிலையே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Chandrababu Naidu's helicopter misses its way, causing excitement

இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் 175 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கும், 25 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜனஜன சக்தி கட்சியுடன் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு என்ற பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளது. இதனை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், பைலட்டுக்கு எச்சரிக்கை செய்தனர்.

இந்த எச்சரிக்கையை அடுத்து ஹெலிகாப்டர் மீண்டும் விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு சென்று பாதுகாப்பாக தரையிறங்கியது. ஏ.டி.சி.யுடன் ஒருங்கிணைப்பு இல்லாததால் வழி தவறி வேறு திசையில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றதால் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. 

Next Story

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது?

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Former Chief Minister of Andhra Pradesh Chandrababu Naidu arrested

 

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு செல்வதில் பணத்தை முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.