Skip to main content

சந்தன வீரப்பன் சமாதி அருகே மாதையன் உடல் அடக்கம்! 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

Chandana Veerappan Samadhi Madhayan's incident

 

உடல் நலக்குறைவால் உயிரிழந்த, ஆயுள் தண்டனை கைதியான சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் உடல், மூலக்காட்டில் வீரப்பன் சமாதி அருகே புதன்கிழமை (மே 25) இரவு அடக்கம் செய்யப்பட்டது.

 

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (வயது 78). ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல்நிலைய எல்லையில் வனச்சரகர் சிதம்பரநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

 

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் இருதய பாதிப்பு, ஆஸ்துமா, நீரிழிவு உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் அடிக்கடி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 

 

இந்நிலையில், மே 1- ஆம் தேதி அவருடைய உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. அவர் உடனடியாக அதே நாளில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூ பிரிவில் சிகிச்சையில் இருந்த அவர், மே 25- ஆம் தேதி அதிகாலை 05.45 மணியளவில் உயிரிழந்தார். 

 

சிறைக்கைதி மரணம் என்பதால், இதுகுறித்து சேலம் மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் தங்க கார்த்திகா நேரில் விசாரணை நடத்தினார். அவர் முன்னிலையில் மாதையனின் சடலம் கூராய்வு செய்யப்பட்டு, வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 

 

உடற்கூராய்வு செய்யப்பட்ட முடிந்த பிறகு, மே 25- ஆம் தேதி மாலை 06.30 மணியளவில் மாதையனின் சடலம், உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறை அருகே, தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், உறவினர்கள் மாதையன் சடலத்துக்கு வீர வணக்கம் செலுத்தினர். 

 

இதையடுத்து அரசு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சடலம், வீரப்பனின் சொந்த ஊரான மேட்டூர் அருகே உள்ள மூலக்காடுக்குக் கொண்டு செல்லப்பட்டது.மூலக்காட்டில் வீரப்பன் சமாதி அருகே, மாதையன் சடலமும் சம்பவத்தன்று இரவு 11.00 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. 

 

இறுதிச்சடங்கில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவருடைய மகள்கள் வித்யா, விஜயலட்சுமி, மாதையனின் மனைவி மாரியம்மாள், மகள் ஜெயம்மாள், மருமகன் முனுசாமி, பேரன் ஸ்ரீநாத், பழங்குடி மக்கள் சங்க பொறுப்பாளர் அன்புராஜ் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் அறிவிப்பு!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Veerappan daughter Vidya Rani announced as the candidate of Naam Tamilar Party!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதில், நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற வேட்பளராக வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்பு பாஜகவில் இருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.