6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Chance of very heavy rain in 6 districts Meteorological Department warns

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe