Chance of rain till 10 am in 18 districts

Advertisment

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை நீடித்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.07.2024) மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளதோடு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவு பத்து மணி வரை தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தேனி, விருதுநகர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேனியில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், கம்பம், கூடலூ,ர் லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.