Advertisment

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Chance of rain in Tamil Nadu for the next 5 days!

வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

Advertisment

இதன் காரணமாகத்திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்குத்தமிழகம் மற்றும் புதுச்சேரியில்லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த நான்கு நாட்களுக்குச் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain monsoon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe