'Chance of rain in Chennai' - Meteorological Department informs

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென் மேற்கு வங்கக் கடலில் நாளை (22.05.2024) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் 23 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் மே 23 ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது.

Advertisment

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (21.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று தென்காசி, தேனி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (22.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (21.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (21.05.2024) காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.