Chance of rain in 9 districts Meteorological Department information

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களின் ஓரிரு இடத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (09.06.2024) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.