Advertisment

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Chance of rain in 9 districts

Advertisment

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இன்று (01.07.2024) இரவு 10 மணிக்குள் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புஎனக்கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe