
தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தின் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். அதே போல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.