'Chance of rain in 7 districts' - Meteorological Center forecast

Advertisment

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாகக் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.

இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று (23.05.2024) வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘வங்கக்கடலில் நிலவி இருந்த குறைந்த தாழ்வுப்பகுதி காலை 08.30 (நேற்று) மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மே 24 ஆம் தேதி (இன்று) மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 25 ஆம் தேதி (நாளை) வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயல் வடக்கு திசையில் நகர்ந்து 26 ஆம் தேதி (நாளை மறுநாள்) மாலையில் வங்க தேசம் அருகே தீவிர புயலாக வலுப்பெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (24.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி திருப்பூர், கோயம்புத்தூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.