Skip to main content

‘4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
'Chance of rain in 4 districts' - Meteorological Department

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வலுவான வடகிழக்கு காற்று மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் மழைக்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் அண்மையில் தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதீத கன மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்