Skip to main content

31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Chance of rain in 31 districts

 

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் 3 மணி நேரத்தில் மழை பெய்யக் கூடும்.

 

மேலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். நாமக்கல், சேலம், தருமபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது’என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்