Skip to main content

இன்று 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

 Chance of rain in 20 districts today

 

பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், ‘இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் வலுவிழக்கக் கூடும். இதன் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

புயல் காரணமாக காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. தமிழகத்தில் காலை 9:30 மணி முதல் 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்