Advertisment

‘17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் கணிப்பு!

'Chance of rain in 17 districts' - Meteorological Center forecast

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

அந்த வகையில் நேற்று (04.08.2024) மாலை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஈக்காட்டுத்தாங்கல், மதுரவாயல், ராமாபுரம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பொழிந்தது. மேலும் பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், செம்பரம்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்தது. அதோடு எம்.ஆர்.சி நகர், மந்தைவெளி, சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணா சாலை, முகப்பேர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடியத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (05.08.2024) வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanjavur Chennai weather rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe