Chance of heavy rain in 19 districts

Advertisment

தமிழகத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று (06.06.2024) கனமழைப் பெய்யக்கூடும்.

மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை (07.06.2024) கனமழைப் பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.