Chance of heavy rain in 19 districts

Advertisment

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் அதேபோல சேலம், திருச்சி, நாமக்கல், கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8 முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். ஜூன் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டி அல்லது சற்று அதிகமாக இருக்கக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.