Skip to main content

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Chance of heavy rain in 14 districts; Meteorological Center warning

 

தமிழ்நாட்டில் அக்டோபர் 29 ஆம் தேதி 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று (25.10.2023) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

மேலும் அக்டோபர் 29 ஆம் தேதி திண்டுக்கல், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், சிவகங்கை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்