தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சில இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில், வரும் 23ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வரும் நவம்பர் 23ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் வரும் 23ஆம் தேதிநகரின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.