Advertisment

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 

Chance of heavy rain in 10 districts of Tamil Nadu!

Advertisment

ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் லேசான மழை பெய்துவருகிறது. இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு முழுக்க கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதேபோல், நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain TAMILANDU
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe