Skip to main content

வறுமையை தூக்கிய தங்கத்தமிழ் மங்கை அனுராதா!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சமோவாக நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 121 – 100 எடைப் பிரிவில் பளு தூக்கி தங்கம் வென்ற பெண் இந்திய தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தார். இந்த காட்சியை பார்த்த புதுக்கோட்டை மாவட்ட மக்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். நம் மண்ணின் மகள் அனுராதா தங்கம் வென்றார் என்பதே அந்த உற்சாகத்திற்கு காரணம். நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட பலரும் அனுராதாவிற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கிராமத்தில் விழா எடுக்க தயாராகி வருகிறார்கள். இனி ஆங்காங்கே பாராட்டு விழாக்களுக்கு குறைவு இருக்காது.

anurada


அனுராதா நாளை சொந்த ஊருக்கு வர உள்ள நிலையில் அவரது சகோதரர் மாரிமுத்து நம்மிடம்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் நெம்மேலிப்பட்டி. விவசாய கூலி குடும்பம். அனுராதா பிறந்த சில வருடங்களில் அப்பா பவுன்ராஜ் இறந்துவிட்டார். அதன்பிறகு அம்மா ராணி தான் கூலி வேலைக்கு போய் எங்களுக்கு சோறு போட்டார். நான் ப்ளஸ் டூ முடித்த பிறகு வறுமையை நினைத்து பள்ளிப்படிப்போடு நிறுத்திவிட்டு தங்கை அனுராதாவை மட்டும் படிக்க அனுப்பினோம். பெருங்களூர் பள்ளியில் படிக்கும் போதே கபடி அணியில் சேர்க்க முயன்றோம். ஆனால் பளுதூக்குவதில் ஆர்வம் காட்டினார். புதுக்கோட்டை கோச் நல்லையாவிடம் அனுப்பினோம். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பிபிஎட் கிடைக்கவில்லை. அதனால் ஒரு டிகிரி போட்டுவிட்டு விளையாட்டில் நாட்டம் காட்டினார். பல்கலைக்கழக அளவில் பரிசுகளை வென்றார். அதன்பிறகு ஜெ.ஜெ கல்லூரியில் மாஸ்டர் டிகிரி படிக்க தொடங்கிய போது நேசனல் போட்டிகளில் கலந்துகொண்டு மெடல் குவித்தார். படிப்படியாக எல்லாவற்றிலும் தங்கம் வென்றார்.

 

anurada


இதைப் பார்த்த பிறகு தான் விளையாட்டு கோட்டாவில் 2 வருசம் முன்னால் எஸ்.ஐ வேலை கிடைத்தது. தஞ்சை மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் பணி. ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுராதாவின் போட்டிகளுக்கு தடை செய்யாமல் உதவிகள் செய்தார். அதனால் அனுராதாவிற்கு ஊக்கமானது.

இந்த நிலையில் தான் இந்திய கேம்ப்ல பயிற்சிக்கு இடம் கிடைத்து பயிற்சி பெற்று வந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவுக்காக வெற்றிக் கனியை பறித்துக் கொண்டு வருகிறார். எங்கள் குடும்பங்களின் வறுமையை நினைத்தே சாதித்துவிட்டாள் என் தங்கை. இப்போது நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போனது. அடுத்து ஒலிம்பிக் போக தகுதி பெற்று தாயகம் திரும்புகிறார். நாளை சொந்த ஊருக்கு வருவார் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.