Skip to main content

போலீசார் பொய் வழக்கு போட்டதாக வீடியோ வெளியிட்டு நிதிநிறுவன அதிபர் தற்கொலை!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்ததாக வீடியோவில் வாக்குமூலம் வெளியிட்டுவிட்டு, நிதிநிறுவன அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (50). திமுக பிரமுகர். அந்தப் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மே 14ம் தேதி மாலை, வீட்டில் இருந்த பிரேம்குமார், வாயில் நுரை தள்ளிய நிலையில் திடீரென்று மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

Chairman of the financial institution suicide in authur

 

சிகிச்சை பலனின்றி மே 15ம் தேதி (புதன்கிழமை) காலை அவர் இறந்தார். இந்நிலையில், தான் ஏன் தற்கொலை செய்து கொண்டேன் என்பதை விளக்கி பிரேம்குமார் தன்னுடைய செல்போனில் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. 

 

 

ஆத்தூர் காவல்துறையில் தன் மீது ஜாதி வன்கொடுமை பிரிவின் கீழ் போலியாக வழக்குப்பதிவு செய்ததால்தான் தற்கொலை செய்து கொண்டதாக அந்த வீடியோவில் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து பிரேம்குமாரின் உறவினர்கள் கூறுகையில், ''பிரேம்குமார், அவருடைய தம்பி செந்தில்குமாருடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அவரிடம் ஆத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் பணம் வாங்கியுள்ளார். 2 மாதத்திற்கு முன்பு, பிரேம்குமார் அதிக வட்டி கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக ராஜ்குமார் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரையும் காவல்துறையினர் நேரில் அழைத்துப்பேசி சமாதானம் செய்து வைத்தனர்.

 

 

கடந்த மாதம் ராஜ்குமார், திடீரென்று பிரேம்குமாரின் தம்பி செந்தில்குமாரின் வீட்டின் முன்பு, தீக்குளிக்க முயன்றார். அப்போதும் இன்ஸ்பெக்டர் கேசவன் இருதரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ராஜ்குமாரிடம் வாங்கிய ஆவணங்களை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் பணத்தைத் திரும்பக் கேட்கக்கூடாது என்றும் பிரேம்குமாரிடம் கூறினார்.

 

Chairman of the financial institution suicide in authur

 

இதற்கு பிரேம்குமார் மறுத்து விட்டார். இதனால் அவர் மீதும், செந்தில்குமார் மீதும் காவல்துறையினர் ஜாதி வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே மனம் உடைந்த பிரேம்குமார் தற்கொலை செய்துள்ளார். அவருடைய தற்கொலைக்கு காவல்துறையினரே காரணம்,'' என்றனர்.

 

 

பிரேம்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ராஜ்குமாரின் பின்னணி குறித்தும், பல்வேறு கட்சி நிர்வாகிகள் தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதையும், தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

 

 

வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ள அனைவரிடமும் காவல்துறையினர் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பிரேம்குமாருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவருடைய தம்பி செந்தில்குமார் ஆத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலராக இருந்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.