Skip to main content

திருச்சியில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு!! வாலிபர் கைது!!

Published on 22/11/2018 | Edited on 22/11/2018

திருச்சியில் தொடர்ச்சியான செயின் பறிப்பு சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் செயின் பறிப்பு கொள்ளை எப்படி நடக்கிறது. இதை யார் நடத்துவது என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தனர் போலீசார் . ஆகவே நகரின் பல பகுதிகளில் சிசிடிவி கேமிரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி காவல்துறை அதிகாரிகளும் சிசிடிவி கேமிரா மக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் பொருத்தும் பணிகளை முடுக்கிவிட்டனர். 

 

CHAIN SNATCH



அதே நேரத்தில் செயின் பறிப்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 


கடந்த 20 ம் தேதி காலை ஸ்ரீரங்கம் மேலூர் போலிஸ் சோதனையில் இருந்த போது பஜாஜ் பல்சரில் வந்த ஒருவர் போலிசை பார்த்ததும் தப்பிக்க வண்டியை திருப்பிய நிலையில் அவனை  உடனை சுற்றி வலைத்து பிடித்த போலிஸ் விசாரிக்கையில் அவன் பிராங்கிளின் குமார் என்றும் ராகவேந்திரபுரத்தை சேரந்தவன் என்றும் தெரிய வந்தது. மேலும் நடந்த விசாரணையில் கடந்த வாரம் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் 1000 ரூபாய் மிரட்டி வாங்கினேன் என்பதை ஒப்புக்கொண்டு மீதம் 600 ரூபாய் கொடுத்தான். இதன் பிறகு அவனை போலிஸ் மேலும் நடத்திய விசாரணையில் இது வரை 15 பெண்களிடம் இருந்து செயின்களை பறித்தேன் என்று சொன்னவுடன் அதிர்ச்சியடைந்தனர். 

 

CHAIN SNATCH



எப்போதும் ஒரு குழுவாக இருந்துதான் பெண்களிடம் செயின் பறிப்பார்கள். அதனால் போலிசுக்கு எப்படியும் தகவல்கள் வெளியே வந்துவிடும். கடந்த மாதங்களில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவம் திருடன் யாரென்றே தெரியாமல் குழம்பி கொண்ட இருந்த நிலையில்தான் பிராங்க்ளின் தனியே சென்று இந்த சம்பவத்தை நடத்துவது தெரிய வந்தது.  
பிராங்கிளின் குமார் போலிசிடம் கொடுத்த வாக்குமூலம் .. 

ஏப்ரல் மாதத்தில் கே.கே.நகரில் முருகவேல் நகரில் வீட்டில் படுத்திருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 6 சவரன் நகையை பறித்து  சென்றேன். 



அதை போல் செப்டம்பர் மாதத்தில் ஒருநாள் கான்வென்ட் ரோட்டில் மாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடமிருந்து சுமார் 2 ¾ பவுன் தாலி செயினை பறித்தேன்.
அதே போல் யூனியன் கிளப் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடமிருந்து 3 பவுன் செயின், வடக்கு ஆண்டார் வீதியில் சாரா லேடீஸ் ஹாஸ்டல் முன்பு ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது 2½ பவுன் செயின், ஸ்ரீரங்கத்தில் திட்டி ஆஞ்சநேயர் கோயில் எதிரில் சாமி கும்பிட்டு கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 5 பவுன் செயின், ஸ்ரீரங்கம் மங்கம்மா நகரில் ஒரு பெண் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது சுமார் 5 பவுன் செயின், சீனிவாசா நகரில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 2 பவுன் செயின், 



திருச்சி பாலக்கரை இருதயபுரம் மேலத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 5 பவுன் தங்கதாலி செயின், திருச்சி இருதயபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 3 பவுன் தங்கத் தாலி செயின், ஸ்ரீரங்கம் கொண்டார் தோப்பில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் சுமார் 5¾ பவுன் செயினை பறித்து செயின், ஸ்ரீரங்கம் மல்லிகைப்பூ அக்ரஹாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 3 பவுன் செயினை பறித்து செயின், ஸ்ரீரங்கம் வாருதி நகரில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 5 பவுன் செயின், கண்டோன்மெண்ட் ஹெட் போஸ்ட் ஆபீஸ் எதிரே இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 6 பவுன் செயின், ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பாலதண்டாயுதபாணி கோயில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 2 பவுன் தாலிச் செயின்னை பறித்து சென்றேன் என கூறினான்.

 

இந்த வாக்குமூலம் பெறப்பட்டபின் அவனிடம் இருந்து ரூ.1800000- மதிப்புள்ள 60 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.600  மற்றும் அவன் ஓட்டி வந்த ரூ. 40000- மதிப்புள்ள பஜாஜ் பல்சர் டூவிலரை கைப்பற்றி கைது செய்து அவனை சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.