ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்திட வேண்டும்,கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகைகள் வழங்கிட வேண்டும், மின்சார துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மத்திய சென்னை கிளை சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் பின்புறம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.