Skip to main content

வன்கொடுமை ஒழிப்புச் சட்டத்தின்மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்புமீது மத்திய அரசு உடனடியாக மறுசீராய்வு மனுதாக்கல் செய்யவேண்டும் :கி.வீரமணி 

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
sp

 

தாழ்த்தப்பட்ட மக்கள்மீது ஆதிக்க ஜாதியினர் நடத்தும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட நடைமுறையில் இருந்துவரும் வன்கொடுமை ஒழிப்புச் சட்டம்பற்றி உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு - குற்றங்களை அதிகரிக்கச் செய்ய வழிவகுப்பதால், இதன்மீது மறுசீராய்வு மனுவினை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

’’எஸ்.சி., எஸ்.டி., என்ற தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சகோதரர், சகோதரிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? 

 

காலங்காலமாக மேல்ஜாதி ஆணவம், திமிர் கொண்டு ‘ஜாதி பஞ்சாயத்து’ என்ற பேரிலும் நடத்தப்பட்ட, தனிப்பட்ட பார்ப்பனீய மேலாதிக்க நோயினால் பீடிக்கப்பட்ட இதர ஜாதியார்களின் வல்லாண்மைக்கு எதிராகவே - அது கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது.

 

பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை: இதில் பெரும்பாலான வழக்குகளில் விடுதலை பெற்றுவிடும் நிலை இருப்பதால், இக்குற்றம் சாட்டப் பெற்ற வன்கொடுமையாளர்கள் பெரிதும் விடுதலை பெற்று விடுவதால், அச்சட்டப்படி உடனடியாக கைது செய்தல் கூடாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு தவறான ஒரு தீர்ப்பாகும்! விசித்திர தீர்ப்பும்கூட!!

 

இத்தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பு என்பதோடு, தீண்டாமைக் கொடுமைக்கும், வன்கொடுமை புரியும் வல்லாண்மையாளர்களுக்கும் சட்டப் பாதுகாப்பு வழங்கி, அச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தினையே தோற்கடிப்பதும் ஆகும்!

 

குற்றங்கள் அதிகம் - வெளிவருவதோ வெகு குறைவு! தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான ஆண், பெண் - இரு பாலர்களுக்கு நாள்தோறும் இழைக்கப்படும் வன்கொடுமைகள் வெளியே வருவது - நடப்பவைகளைவிட செய்தியாக வெளிவருவது வெகுக் குறைவே! ‘கற்பழிப்பு வழக்குகளில்’ பாதிக்கப்பட்டோர் வெளியே சொல்லாமல் ‘‘கமுக்கமாக’’ வைத்துக்கொள்ளும் வழமைபோல!

 

‘தலித் மக்களின் பாதுகாப்பு மய்யம்‘ என்ற ஓர் அமைப்பு செய்த ஆய்வு - இத்தீர்ப்பு எவ்வளவு ஒருதலைப்பட்சமான, ஒடுக்கப்பட்ட மக்களை பாதிக்கப்பட வைக்கும் தீர்ப்பு என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்குவதாக உள்ளது.

 

Centre for Dalit Rights (CDR)-என்ற அந்த அமைப்பின் புள்ளி விவரம் இதோ!

குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் - அண்மைக் காலத்தில் 5.5 சதவிகிதமாகி இருக்கிறது. 2016 இல் 4.7 சதவிகிதமாக இருந்தது இவ்வாறு அதிகரித்துள்ளது!

 

மொத்தம் 1.44 லட்சம் வழக்குகளில் 23,408 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு வந்துள்ளன - நீதிமன்றங்களில்! இதில் விசாரணை முடிந்துள்ளவை 14,615 வழக்குகள்தான். தாழ்த்தப்பட்ட மக்கள் (எஸ்.சி.,), மலைவாழ் மக்கள் (எஸ்.டி.) ஆகியவர்கள்மீது ஏற்பட்ட வன்கொடுமைகள் பற்றிய வழக்குகளில் 2016 இல் 2,865 வழக்குகள்தான் முடிக்கப்பட்டுள்ளன!

 

நிலுவையில் உள்ள வழக்குகளோ 90% - 2016 ஆம் ஆண்டு இறுதியில் எஸ்.சி., மக்களுக்கு எதிரான குற்றங்கள்மீது நடத்தப்பட்ட வழக்குகளில் 89.6% (சுமார் 90 விழுக்காடு) இன்றும் விசாரணை முடிக்கப்பட முடியாத கட்டத்திலேயே இருக்கின்றன!

 

எஸ்.டி., என்ற மலைவாழ் மக்கள்மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலான வழக்குகளில் 87.1% விசாரணையின்றி நிலுவையில் உள்ளன!  மேலும் கடுமையாக்க ப்படவேண்டும் - இதன்மூலம் இச்சட்டம் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டுமே, தவிர, இலகுவாக ஆக்கப்படக் கூடாது.

 

காவல்துறையில் நிலவும் ஜாதி உணர்வும், ஜாதிய அணுகுமுறையும், மனப்பான்மையும் புறந்தள்ளத்தக்கதல்ல. படித்து, பதவிகளை ஓரளவு பெறுகிறார்கள் இந்த ஒடுக்கப்பட்டோர் என்பதை சகித்துக் கொள்ளாத நிலை பெரிதும் கிராமப்புறங்களில், ஆதிக்க ஜாதியினரிடம் (அது உள்ளார்ந்த பார்ப்பனீய மனப்பான்மையே) உள்ளது. அதன் விளைவால் அம்மக்களைக் கொடுமையாக நடத்தும் நிலை நிலவுகிறது.

 

அண்மையில் குஜராத் ‘உன்னா’ பகுதியில் நடந்த நிகழ்வின் கொடுமை எளிதில் புறந்தள்ளக் கூடியதா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மீது மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவேண்டும்.   மகளிரிடம் தவறான நோக்குடனும், காம இச்சையுடனும் நடக்கும் மேல் அதிகாரிகள், சக ஊழியர்கள் விஷயத்தில் (ஏன் காவல்துறையும் கூட - இதற்கு விதிவிலக்கல்ல) Offences against Sexual Harrasment Act என்பது, அதிலும் இதே மாதிரி எல்லாவற்றையும் ‘‘பொய்ப் புகார்கள் - மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள்’’ என்று புறந்தள்ளி விட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பினை எங்கே தேடுவது?

 

கடும் சட்டமிருந்தே அடங்க மறுக்கும் ஆதிக்க மனப்பான்மையாளர்களுக்கு அண்மையில் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு - மேலும் அக்குற்றங்களில் துணிந்து ஈடுபட ‘‘லைசென்சு’’ கொடுத்ததுபோல் ஆக்கிவிடும். எனவே, இது மறுசீராய்வுக்கு (Review)உரியதாகையால், மத்திய அரசு உடனே முன்வரவேண்டும். திராவிடர் கழகம் இதனை மிகவும் வற்புறுத்துகிறது.’’

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

“இந்த தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” - அமைச்சர் பொன்முடி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

பதவியேற்புக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நிணைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாக சட்டப்பூர்வமாக இன்று (22.03.2024) அமைச்சர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன். இதனை யாரும் மறுக்க முடியாது. முதல்வருக்கும், வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் வில்சனுக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இந்த தீர்ப்பு என்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.