Skip to main content

வன்கொடுமை ஒழிப்புச் சட்டத்தின்மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்புமீது மத்திய அரசு உடனடியாக மறுசீராய்வு மனுதாக்கல் செய்யவேண்டும் :கி.வீரமணி 

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
sp

 

தாழ்த்தப்பட்ட மக்கள்மீது ஆதிக்க ஜாதியினர் நடத்தும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட நடைமுறையில் இருந்துவரும் வன்கொடுமை ஒழிப்புச் சட்டம்பற்றி உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு - குற்றங்களை அதிகரிக்கச் செய்ய வழிவகுப்பதால், இதன்மீது மறுசீராய்வு மனுவினை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

’’எஸ்.சி., எஸ்.டி., என்ற தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சகோதரர், சகோதரிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? 

 

காலங்காலமாக மேல்ஜாதி ஆணவம், திமிர் கொண்டு ‘ஜாதி பஞ்சாயத்து’ என்ற பேரிலும் நடத்தப்பட்ட, தனிப்பட்ட பார்ப்பனீய மேலாதிக்க நோயினால் பீடிக்கப்பட்ட இதர ஜாதியார்களின் வல்லாண்மைக்கு எதிராகவே - அது கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது.

 

பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை: இதில் பெரும்பாலான வழக்குகளில் விடுதலை பெற்றுவிடும் நிலை இருப்பதால், இக்குற்றம் சாட்டப் பெற்ற வன்கொடுமையாளர்கள் பெரிதும் விடுதலை பெற்று விடுவதால், அச்சட்டப்படி உடனடியாக கைது செய்தல் கூடாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு தவறான ஒரு தீர்ப்பாகும்! விசித்திர தீர்ப்பும்கூட!!

 

இத்தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பு என்பதோடு, தீண்டாமைக் கொடுமைக்கும், வன்கொடுமை புரியும் வல்லாண்மையாளர்களுக்கும் சட்டப் பாதுகாப்பு வழங்கி, அச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தினையே தோற்கடிப்பதும் ஆகும்!

 

குற்றங்கள் அதிகம் - வெளிவருவதோ வெகு குறைவு! தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான ஆண், பெண் - இரு பாலர்களுக்கு நாள்தோறும் இழைக்கப்படும் வன்கொடுமைகள் வெளியே வருவது - நடப்பவைகளைவிட செய்தியாக வெளிவருவது வெகுக் குறைவே! ‘கற்பழிப்பு வழக்குகளில்’ பாதிக்கப்பட்டோர் வெளியே சொல்லாமல் ‘‘கமுக்கமாக’’ வைத்துக்கொள்ளும் வழமைபோல!

 

‘தலித் மக்களின் பாதுகாப்பு மய்யம்‘ என்ற ஓர் அமைப்பு செய்த ஆய்வு - இத்தீர்ப்பு எவ்வளவு ஒருதலைப்பட்சமான, ஒடுக்கப்பட்ட மக்களை பாதிக்கப்பட வைக்கும் தீர்ப்பு என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்குவதாக உள்ளது.

 

Centre for Dalit Rights (CDR)-என்ற அந்த அமைப்பின் புள்ளி விவரம் இதோ!

குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் - அண்மைக் காலத்தில் 5.5 சதவிகிதமாகி இருக்கிறது. 2016 இல் 4.7 சதவிகிதமாக இருந்தது இவ்வாறு அதிகரித்துள்ளது!

 

மொத்தம் 1.44 லட்சம் வழக்குகளில் 23,408 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு வந்துள்ளன - நீதிமன்றங்களில்! இதில் விசாரணை முடிந்துள்ளவை 14,615 வழக்குகள்தான். தாழ்த்தப்பட்ட மக்கள் (எஸ்.சி.,), மலைவாழ் மக்கள் (எஸ்.டி.) ஆகியவர்கள்மீது ஏற்பட்ட வன்கொடுமைகள் பற்றிய வழக்குகளில் 2016 இல் 2,865 வழக்குகள்தான் முடிக்கப்பட்டுள்ளன!

 

நிலுவையில் உள்ள வழக்குகளோ 90% - 2016 ஆம் ஆண்டு இறுதியில் எஸ்.சி., மக்களுக்கு எதிரான குற்றங்கள்மீது நடத்தப்பட்ட வழக்குகளில் 89.6% (சுமார் 90 விழுக்காடு) இன்றும் விசாரணை முடிக்கப்பட முடியாத கட்டத்திலேயே இருக்கின்றன!

 

எஸ்.டி., என்ற மலைவாழ் மக்கள்மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலான வழக்குகளில் 87.1% விசாரணையின்றி நிலுவையில் உள்ளன!  மேலும் கடுமையாக்க ப்படவேண்டும் - இதன்மூலம் இச்சட்டம் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டுமே, தவிர, இலகுவாக ஆக்கப்படக் கூடாது.

 

காவல்துறையில் நிலவும் ஜாதி உணர்வும், ஜாதிய அணுகுமுறையும், மனப்பான்மையும் புறந்தள்ளத்தக்கதல்ல. படித்து, பதவிகளை ஓரளவு பெறுகிறார்கள் இந்த ஒடுக்கப்பட்டோர் என்பதை சகித்துக் கொள்ளாத நிலை பெரிதும் கிராமப்புறங்களில், ஆதிக்க ஜாதியினரிடம் (அது உள்ளார்ந்த பார்ப்பனீய மனப்பான்மையே) உள்ளது. அதன் விளைவால் அம்மக்களைக் கொடுமையாக நடத்தும் நிலை நிலவுகிறது.

 

அண்மையில் குஜராத் ‘உன்னா’ பகுதியில் நடந்த நிகழ்வின் கொடுமை எளிதில் புறந்தள்ளக் கூடியதா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மீது மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவேண்டும்.   மகளிரிடம் தவறான நோக்குடனும், காம இச்சையுடனும் நடக்கும் மேல் அதிகாரிகள், சக ஊழியர்கள் விஷயத்தில் (ஏன் காவல்துறையும் கூட - இதற்கு விதிவிலக்கல்ல) Offences against Sexual Harrasment Act என்பது, அதிலும் இதே மாதிரி எல்லாவற்றையும் ‘‘பொய்ப் புகார்கள் - மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள்’’ என்று புறந்தள்ளி விட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பினை எங்கே தேடுவது?

 

கடும் சட்டமிருந்தே அடங்க மறுக்கும் ஆதிக்க மனப்பான்மையாளர்களுக்கு அண்மையில் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு - மேலும் அக்குற்றங்களில் துணிந்து ஈடுபட ‘‘லைசென்சு’’ கொடுத்ததுபோல் ஆக்கிவிடும். எனவே, இது மறுசீராய்வுக்கு (Review)உரியதாகையால், மத்திய அரசு உடனே முன்வரவேண்டும். திராவிடர் கழகம் இதனை மிகவும் வற்புறுத்துகிறது.’’

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Supreme Court verdict for case of Vvpad 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தன. மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

Supreme Court verdict for case of Vvpad 

இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்” எனத் தெரிவித்தனர். 

Supreme Court verdict for case of Vvpad 

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Supreme Court verdict for case of Vvpad 

இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “தேர்தல் ஆனையம் கொடுத்த அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆதரங்களையும், அதற்கான வாதங்களையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். எனவே வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஒரு முறையில்  சின்னம் பதிவு செய்யும் செயல்முறை முடிந்ததும், சின்னம் பதிவேற்றும் இயந்திரத்தை (SLU) சீல் வைக்க வேண்டும். வாக்குகள் எண்ணி முடித்த பின் அவை குறைந்தது 45 நாட்களுக்கு சேமிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.  

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது.