Skip to main content

புதிய கல்வி கொள்கை மத்திய அரசு கைவிட வேண்டும்... தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
The Central Government should abandon the new education policy ... Resolution of the Pudukottai District Executive Committee of the Tamil Nadu Teachers' Progressive Association

 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் கூகுள் மீட் வழியாக நடைபெற்றது. செயற்குழுவில் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் நாயகம் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் மாநில நிர்வாகிகள் பன்னீர்செல்வம், முகேஷ், ஜெகதீஸ்வரன், ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என்று பேசினார்.. 

இச்செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, கரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தன்னுயிர் துக்கமென்ன நினைத்து களப்பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் மருத்துவம் சார்ந்த பணியில் ஈடுபடும் அனைத்துத்துறை ஊழியர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றியும் பாராட்டும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும். கரோனோ நோய் தொற்று தீவிரமடையும் அடைவதால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.கரோனா தடுப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 5000க்கு மேற்பட்டோர் மீது ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் போடப்பட்டுள்ள குற்ற குறிப்பாணைகள் (17B) நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் பணி மாறுதல் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விரோத நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டதை காரணம் காட்டி ஓய்வு பெறும் நாளன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோரின் பணியிடை நீக்கம் ரத்து செய்து முறையான பணி ஓய்வு ஆணை வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்தும் கிடைக்காத நிலையில் பின்னேற்பு விண்ணப்பித்துள்ள 5000 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்துவிட்டு பின்னேற்பு வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி காலத்தில் வழங்கப்படும் அனைத்து வகையான விலையில்லா பொருட்களையும் உடனடியாக வழங்க வேண்டும். என்.எம்.எம்.எஸ் மற்றும் என்.டி.எஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊர்திப்படியை  மே மாதம் பிடித்த செய்யாமல் தொடர்ந்து வழங்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.