Skip to main content

புதிய கல்வி கொள்கை மத்திய அரசு கைவிட வேண்டும்... தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
The Central Government should abandon the new education policy ... Resolution of the Pudukottai District Executive Committee of the Tamil Nadu Teachers' Progressive Association

 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் கூகுள் மீட் வழியாக நடைபெற்றது. செயற்குழுவில் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் நாயகம் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் மாநில நிர்வாகிகள் பன்னீர்செல்வம், முகேஷ், ஜெகதீஸ்வரன், ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என்று பேசினார்.. 

இச்செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, கரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தன்னுயிர் துக்கமென்ன நினைத்து களப்பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் மருத்துவம் சார்ந்த பணியில் ஈடுபடும் அனைத்துத்துறை ஊழியர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றியும் பாராட்டும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும். கரோனோ நோய் தொற்று தீவிரமடையும் அடைவதால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.கரோனா தடுப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 5000க்கு மேற்பட்டோர் மீது ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் போடப்பட்டுள்ள குற்ற குறிப்பாணைகள் (17B) நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் பணி மாறுதல் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விரோத நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டதை காரணம் காட்டி ஓய்வு பெறும் நாளன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோரின் பணியிடை நீக்கம் ரத்து செய்து முறையான பணி ஓய்வு ஆணை வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்தும் கிடைக்காத நிலையில் பின்னேற்பு விண்ணப்பித்துள்ள 5000 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்துவிட்டு பின்னேற்பு வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி காலத்தில் வழங்கப்படும் அனைத்து வகையான விலையில்லா பொருட்களையும் உடனடியாக வழங்க வேண்டும். என்.எம்.எம்.எஸ் மற்றும் என்.டி.எஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊர்திப்படியை  மே மாதம் பிடித்த செய்யாமல் தொடர்ந்து வழங்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.