தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே கடந்த மாதம்6 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில்தற்போது கிருஷ்ணகிரி, திருவள்ளுர், நாகை ஆகியமூன்று இடங்களில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில்இந்த கல்லூரிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
3 கல்லுரிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசு மருத்துவகல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது. புதியதாக நிறுவப்படவுள்ள இந்த 3 மருத்துவக்கல்லூரிகளால் தலா ஒரு கல்லூரிக்கு 150 இடங்கள் கிடைக்கும். இதனால் எம்.பி.பி.எஸ் இடங்கள் 4,600 ஆக உயரும்.
தற்போது புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை தவிர பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மட்டும் அரசு மருத்துவக்கல்லூரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.