Skip to main content

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா: சென்னை வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

Centenary celebrations of the Tamil Nadu Legislative Assembly: President Ramnath Govind arrives in Chennai

 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று (02.08.2021) மதியம் 12 மணிக்கு சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அவரது வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. சென்னை வந்ததும் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார் குடியரசுத் தலைவர். மாலை 5 மணிக்கு சட்டமன்றத்தில் விழா துவங்குகிறது. விழாவில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே விழா அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவர். விழா துவங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகவே அரங்கத்துக்குள் வந்துவிட வேண்டும். விழாவுக்கு வருபவர்கள் கரோனா கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அழைப்பிதழிலேயே அவர்கள் அமரும் எண் குறிப்பிடப்பட்டிருப்பதால் அந்த இருக்கையைத் தவிர்த்து வேறு இருக்கைக்கு செல்லக்கூடாது என்றும், N95 முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அழைப்பாளர்களுக்கு அறிவுறுத்துப்பட்டுள்ளது. அரங்கத்துக்குள் செல்ஃபோன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வரும் குடியரசுத் தலைவரையும் ஆளுநரையும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினும், சபாநாயகர் அப்பாவுவும் முன்னின்று வரவேற்று அரங்கத்துக்குள் அழைத்துச் செல்கின்றனர்.

 

Centenary celebrations of the Tamil Nadu Legislative Assembly: President Ramnath Govind arrives in Chennai

 

கவர்னர் பன்வாரிலால் தலைமையில் நடக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில், கவர்னர் பன்வாரிலால் தலைமை உரையையும், முதல்வர் ஸ்டாலின் சிறப்பு உரையையும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேருரையையும் வாசிக்கின்றனர். குடியரசுத் தலைவருக்கு சிறப்பு நினைவு பரிசும் வழங்கப்படவிருக்கிறது. விழா முடிந்து மாலை 5.55 மணிக்கு தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டு ராஜ்பவன் திரும்பும் குடியரசுத் தலைவர், இன்றிரவு அங்கேயே தங்குகிறார். நாளை காலை உணவு முடித்துவிட்டு, சென்னையிலிருந்து ஊட்டி செல்கிறார் ராம்நாத் கோவிந்த். ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.